கொரோனாவில் இருந்து உயிர்தப்பி 106 வயது டெல்லி முதியவர்
1 min read
The survivor from Corona is a 106-year-old in Delhi
8-7-2020
கொரோனா பாதிக்கப்பட்ட 106 டெல்லி முதியவர் பூரண குணம் அடைந்தார். அவரது குடும்பத்தினர் 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தனர்.
கொடூரமான கொரோனா
கொரோனா இன்று உலகையே ஆட்டி படைக்கு ஒரு வைரஸ். இந்த தொற்றுக்கு இதுவரை உலகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
இதற்கு முன்பு 1918-ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய ஸ்பேனிஷ் ப்ளூ என்ற காய்ச்சலுக்கு 4 கோடி பேர் பலியானார்கள் என்று உலக சுகாதார அமைப்பின் அறிக்கையொன்று தெரிவிக்கிறது. இந்தியாவலும் இதன் பாதிப்பு அதிகமாக இருந்ததான கூறப்படுகிறது.
இதேபோன்று, கடந்த 102 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட இந்த பாதிப்புக்கு உலகில் 3-ல் ஒரு பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அதன்பின் தற்போது கொரோனா என்ற கொடூர நோய் உலகையே அச்சுறுத்தி வருகிறான்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்கள், குழந்தைகள்தான் அதிகமாக உயிரிழக்க நேரிடும் என்றும் எனவே அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது.
106 வயது முதியவர்
இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த 106 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்துள்ளார். கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் நகரங்களல் ஒன்று டெல்லி. அங்கு வசித்து வரும் முக்தார் அகமது வுக்கு 106 வயது. அவருக்கும் அவரது 70 வயது மகனுக்கும் சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, கொரோனா மையத்தில் அளித்து வந்த சிகிச்சையில் அவர்கள் இருவருக்கும் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது.
அதன்பின், பாதிப்பிலிருந்து முதியவர் முழு அளவில் விடுபட்டார். அவரது மகன், மனைவி மற்றும் மற்றொரு குடும்ப உறுப்பினர் என 4 பேரும் பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். தனது மகனை விட முதியவர் வெகுவிரைவில் குணமடைந்தது அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தியது.
கடந்த 1918-ம் ஆண்டு உலகம் முழுவதும் ஸ்பேனிஷ் ப்ளூ நோய் பாதிப்பு ஏற்படும்பொழுது, முதியவருக்கு 4 வயது ஆகியிருந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்ட பின்னர் அவர் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உள்ளார். அவர் கூறும்போது, ‘‘நான் பிழைப்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால், முறையான சிகிச்சை அளித்ததில் நான் குணமடைந்துள்ளேன். என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு நோய்த்தொற்றை ஒருபோதும் கண்டதேயில்லை’’ என்று கூறியுள்ளார்.