June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா; 67 பேர் சாவு

1 min read

In Tamil Nadu Corona affected 4.526 and death 67 one day

14-7-2020

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உ்ளளது; இன்று மட்டும் 67 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

 4,526 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் தினமும் கொரோனா பாதிப்பு  அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா நிலவரம் குறித்து இன்று மாலை தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

 தமிழ் நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 4,526 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில், 4,467 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 59 பேர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த  எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் குறைகிறது

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் மட்டும் சில நாட்களாக குறைந்து வருகிறது. இன்று சென்னையில் 1,078 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 79,662 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை தவிர்த்து, இன்று, மதுரையில் 450 பேருக்கும், திருவள்ளூரில் 360 பேருக்கும், விருதுநகரில் 328 பேருக்கும், செங்கல்பட்டில் 264 பேருக்கும், வேலூரில் 194 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தென்காசி

தூத்துக்குடியில் 113 பேருக்கும் தென்காசியில் 104 பேருக்கும் திருநெல்வேலியில் 59 பேருக்கும் கொரோனா தொன்று இன்று கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழ் நாட்டில் மொத்தம் 106 ஆய்வகங்கள் உள்ளன. இதில் 53 அரசு  பரிசோதனை நிலையங்கள் மற்றவை தனியார் நிறுவனங்கள். இவைகள் மூலமாக, இன்று மட்டும் 41,357 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை மொத்தம் 16 லட்சத்து 95 ஆயிரத்து 365 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

67 பேர் சாவு

இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,723 பேர் ஆண்கள், 1,803 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 89,834 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 57,467 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 4,743 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 310 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனாவுக்கு 67 பேர் இறந்துள்ளனர். அதில், 17 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும், 50 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்றவர்கள். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2,099 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 47,912 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 18 பேரும், திருச்சியில் 6 பேரும், செங்கல்பட்டு, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, திருவள்ளூர், வேலூரில் தலா 4 பேரும், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், விருதுநகரில் தலா 2 பேரும், கோவை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருப்பூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 67 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 7,304 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,22,075 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 17 ஆயிரத்து 945 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரவித்துள்ளது.

கோவை

 கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில், 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,480 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இன்று 17 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.