June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

நயன்தாரா டிவி பேட்டி கொடுக்காமல் இருக்க பிரபுதேவா தான் காரணமாம்

1 min read
Prabhu Deva is the reason why Nayantara did not give a TV interview

நயன்தாரா டிவி சேனல்களுக்கு பேட்டி கொடுத்து நீண்ட நாட்களாகிவிட்டது. சில வருடங்களாகவே பிடிகொடுக்காமல் இருந்த நயன்தாரா சமீபத்தில் வெளிவந்த கோலமாவு கோகிலா படத்திற்கு மட்டும்தான் விளம்பரத்திற்காக பேட்டி கொடுத்தார்.

நயன்தாரா என்றாலே சர்ச்சை நாயகி தான். அதிலும் காதல் சர்ச்சைகளில் அம்மணி மாட்டாத இடமே இல்லை. பொசுக்கு பொசுக்கென அவருக்கு காதல் வந்து விடுவது தான் அவருக்கு உள்ள ஒரு வீக்னெஸ்அப்படித்தான் வல்லவன் படத்தின் போது சிம்பு மீதும், அதன்பிறகு வில்லு படத்தின் போது பிரபுதேவா மீதும் காதல் ஏற்பட்டது. பிரபுதேவா காதல் தான் முற்றி திருமணம் வரை சென்றது.

அவருக்காக மதம் மாறி என்னென்னமோ சேட்டைகள் செய்தார் நயன்தாரா. ஆனால் சிம்புவுடன் சம்பந்தபடுத்தி பிரபுதேவா நயன்தாராவை இழிவுபடுத்தி பேசியதால் அவரை விட்டு விலகியதாக ஒரு செய்தி உள்ளது. அதில் எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.

நயன்தாரா-பிரபுதேவா சர்ச்சைக்கு பிறகு நயன்தாரா கொடுத்த பேட்டிகளில் அவர் பேசிய சில விஷயங்களை வேறு விதமாக மாத்தி விட்டு விட்டார்களாம். இதனால் நிறையவே அசிங்கப்பட்டு விட்டாராம் நயன்தாரா.

அதனால் இனி யாரையும் எந்த சேனலையும் நம்பி நான் பேட்டி கொடுக்க போவதில்லை என முடிவு எடுத்திருந்தார். சமீபகாலமாக விக்னேஷ் சிவனை காதலிப்பதால் சந்தோசமாக இருக்கும் நயன்தாரா அவ்வப்போது சமூக வலைதளங்களில் தன்னுடைய முகத்தை காட்டி வருகிறார்.

விக்னேஷ் சிவன் எதையும் தாங்கும் இதயம் ஆக இருப்பார் போல. அதனால்தான் அவரின் காதலை நயன்தாரா ஒத்து கொண்டு இருக்க வேண்டும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.