அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை
1 min read
Treatment of asymptomatic corona patients by Chitha medicine
14-7-2020
அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சித்த மருத்துவமும் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவையில் இந்த சிகிச்சை தொடங்கப்பட உள்ளது.
கோவையில்…
தமிழகத்தில் சென்னையில் மட்டும்தான் கொரோனா அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருந்தது. தற்போது மற்ற மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கி உள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இன்று(செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் அங்கு 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,480 ஆக உயர்ந்துள்ளது. இந்த மாவட்டத்தில் கொரோனாவக்கு ஒருவர் இறந்துள்ளார். இன்று 17 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
சித்த மருத்துவ சிகிச்சை
இந்த நிலையில், கொரோனா தொற்று இருந்தும் அறிகுறிகள் இல்லாத நோயாளிகளுக்கு, கோவையில் நாளை(புதன்கிழமை) முதல் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து சித்த மருத்துவ அலுவலர் தனம் கூறியதாவது:-
யோகா
அறிகுறி இல்லாத ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள், சென்னையில் சித்த மருத்துவ சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனர்.
நாளை முதல் கோவையிலும் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இதற்காக, கொடிசியா வளாகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு கபசுர குடிநீர், சூரணம், மூலிகை குடிநீர், இயற்கையான சத்து பானங்கள், சித்தா மாத்திரைகள் மற்றும் சத்தான உணவுகள் வழங்கப்படும். நோயாளிகளின் மன அழத்தத்தை நீக்க யோகா, உடற்பயிற்சிகளும் அளிக்கப்படவுள்ளது,
இவ்வாறு அவர் கூறினார்.