June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனா

1 min read

4.496 person affected for Corona in Tamil nadu today

15-7-2020

தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 4,496 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 68 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

4,496 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை தினமும் மாலையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று ( புதன்கிழமை)
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழ் நாட்டில் இன்று (புதன் கிழமை ) ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதில், 4,430 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 66 பேர். இதனால் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது.

5 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்

தமிழ்நாட்டில் 107 ஆய்வகங்கள் உள்ளன . இதில் அரசு ஆய்வங்கள் 54 . தனியார் ஆய்வகங்கள் 53. இவைகள் மூலமாக இன்று மட்டும் 41,382 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இவைகளையும் சேர்த்து, இதுவரை மொத்தம் 17 லட்சத்து 36 ஆயிரத்து 747 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 2,680 பேர் ஆண்கள், 1,816 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 92,514 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 59,283 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது.

இன்று மட்டும் 5 ஆயிரம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால், இதுவரை குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 310 ஆக உள்ளது.

68 பேர் சாவு

கொரோனாவுக்கு இன்று மட்டும் 68 பேர் இறந்தனர். இவர்களில் 20 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும், 48 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்றவர்கள்.
சென்னையில் 23 பேரும், திண்டுக்கல், மதுரையில் தலா 5 பேரும், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, வேலூரில் தலா 4 பேரும், செங்கல்பட்டு, சிவகங்கை, விருதுநகரில் தலா 3 பேரும், காஞ்சிபுரம், தேனி, தூத்துக்குடி, விழுப்புரத்தில் தலா 2 பேரும், கோவை, ஈரோடு, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலையில் தலா ஒருவரும் என 68 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,167 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 47,340 பேர் பல் வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 7,531 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,25,736 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 ஆயிரத்து 553 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது..

சென்னையில்

இதற்கு முன்பு சென்னையில்தான் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும். தற்போது மற்ற மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இன்று( புதன்கிழமை) அதிகபட்சமாக சென்னையில் 1,291 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 80,961 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை தவிர, இன்று, மதுரையில் 341 பேருக்கும், திருவள்ளூரில் 278 பேருக்கும், தூத்துக்குடியில் 269 பேருக்கும், செங்கல்பட்டில் 186 பேருக்கும், விருதுநகரில் 175 பேருக்கும், திருநெல்வேலியில் 164 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 163 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
தென்காசியில் 17 பேருக்கு கொரோனா தொற்று இன்று கண்டறியப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.