12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு -மாணவிகள் அதிகம் தேர்ச்சி
1 min read
தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன.
Class 12 Exam Results Release – girl Students pass highதமிழகம் முழுக்க, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 7,127 பள்ளிகளில் 2120 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகளில் 85.94 சதவீதம் பேரும் மெட்ரிக் பள்ளிகளில் 98.70% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக மாற்றுத்திறனாளி மாணவர்களில் 2,506 பேர் தேர்ச்சி பெற்றுள்ளன.
இத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடமும், ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடமும் கோவை மூன்றாமிடமும் பெற்றுள்ளன. கடந்த வருடமும் இதே போன்ற இடங்களை இம்மாவட்டங்கள் பிடித்தன. கடலூர் மாவட்டம் 77.74 சதவீதத்துடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது. சிறைக் கைதிகள் 62 பேர் பிளஸ் டூ தேர்வு எழுதிய நிலையில், அவர்களிலும் 50 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள்-94.80% பேரும், மாணவர்கள் 89.41% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி, வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை இணையதளத்தில் தேர்வு முடிவுகளை கைபேசி வாயிலாக குறுஞ்செய்தி மூலம் முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும் என்றும் 11ம் வகுப்பு மறு தேர்வு முடிவுகளையும் இன்றே அறிந்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள், dge.tn.gov.in, dge.tn.nic.in, examresults.net, http://www.results.nic.in/ என்ற இணையதளங்களில் பார்க்க முடியும்.