June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் அமைச்சர் உள்பட 4,549 பேருக்கு கொரோனா

1 min read


Corona for 4,549 people in Tamil Nadu, including the minister

16-7-2020

தமிழத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் கிரீ்னவேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளார். தமிழகத்தில் இன்று மட்டும் 4,549 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

அமைச்சருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அமைச்சர் மற்றும் அதிகாரிகளையும் விட்டுவைக்க வில்லை. தற்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

முன்னதாக அமைச்சரின் மகன், மருமகனுக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தற்போது அமைச்சருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் அவர் கிரீ்னவேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளார்.

அமைச்சர் நிலபோர் கபில் நேற்று அமைச்சரவை கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.
ஏற்கனவே 2 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். தற்போது மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

4,549 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோன நிலவரம் பற்றி இன்று (வியாழக்கிழமை) தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் 4,549 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவர்களில், 4,483 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 66 பேர்.


சென்னையில்

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் சென்னையில் மட்டும் 1,157 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையை தவிர்த்து, இன்று, திருவள்ளூரில் 526 பேருக்கும், மதுரையில் 267 பேருக்கும், வேலூரில் 253 பேருக்கும், திருவண்ணாமலையில் 212 பேருக்கும், செங்கல்பட்டில் 179 பேருக்கும், தூத்துக்குடியில் 171 பேருக்கும், கன்னியாகுமரியில் 146 பேருக்கும், ராணிப்பேட்டை, விருதுநகரில் தலா 145 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. நெல்லையில் 130 பேருக்கும், தென்காசியில் 20 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 107 ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் 54 அரசு ஆய்வகங்கள் மற்றவை தனியார் ஆய்வகங்கள். இவற்றின் மூலம் இன்று மட்டும் 45,888 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 17 லட்சத்து 82 ஆயிரத்து 635 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

குணம் அடைந்தவர்கள்

இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,794 பேர் ஆண்கள், 1,755 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 95,308 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 61,038 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 5,106 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 416 ஆக உள்ளது.

69 பேர் சாவு

இன்று மட்டும் கொரோனா பாதித்த 69 பேர் உயிரிழந்தனர். அதில், 25 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும் 44 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,714 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று சென்னையில் 23 பேரும், திருவள்ளூரில் 7 பேரும், மதுரையில் 5 பேரும், செங்கல்பட்டு, வேலூரில் தலா 4 பேரும், காஞ்சிபுரம், தேனி, திருச்சி, விழுப்புரத்தில் தலா 3 பேரும், சேலம், தூத்துக்குடி, விருதுநகரில் தலா 2 பேரும், கோவை, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவண்ணாமலையில் தலா ஒருவரும் என 69 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மேற்கண்ட தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.