June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

நெல்லையில் இருந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது; 6 பேர் சாவு

1 min read

Nellai car accident near Viluppuaram- 6 killed

16-7-2020

நெல்லையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் விபத்தில் சிக்கியதில் 6 பேர் பலியானார்கள்.

நெல்லை விபத்து

திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு சுமோ கார் ஒன்று புறப்பட்டது. அதில் பலர் இருந்தனர்.
அந்தக் கார் இன்று காலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பாதிரி கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது. பின்னர் சாலையோரம் இருக்கும் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

6 பேர் சாவு

தகவல் கிடைத்தும் போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இரண்டு குழந்தைகள் படுகாயத்துடன் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
விசாரணையில் அந்த காரில் முருகராஜ், முருகன், சொரிமுத்து உள்பட பலர் சென்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.