June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

சென்னையிலிருந்து நெல்லைக்கு சைக்கிளில் வந்த 73 வயது முதியவர்

1 min read

17.7.2020

The 73-year-old man came to Tirunelveli on a bicycle from Chennai

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள தெய்வநாயகப்பேரியைச் சேர்ந்தவர் பாண்டியன்(73). அந்த காலத்தில் பியூசி வரை படித்த இவர், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள். அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். தற்போது சென்னையில் கொராேனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் பாண்டியன் சென்னையில் இருந்து சைக்கிளில் தெய்வநாயகப்பேரிக்கு வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த மாதம் 25ம்தேதி சைக்கிளில் சென்னையிலிருந்து ஊருக்கு புறப்பட்டேன். 5 நாட்கள் பயணித்தேன். பகலில் மட்டும் பயணம் மேற்கொள்வேன். இரவில் சாலையோரத்தில் ஓய்வெடுத்து, வழியில் உணவகங்களில் கிடைத்த உணவை உண்டேன். வரும் வழியில் யாரும் எனக்கு இடையூறு செய்யவில்லை. எந்த சோதனைச் சாவடியிலும் பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை. கடந்த 29ம்தேதி தெய்வநாயகப்பேரியில் உள்ள அண்ணன் வீட்டிற்கு வந்தேன்.

அன்று முதல் 15 நாட்கள் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டு கபசுரக் குடிநீர் அருந்தி கொராேனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டேன். தற்போது நான் நலமுடன் இருக்கிறேன். எனது மனைவி மற்றும் குடும்பத்தினர் சென்னையில் உள்ளனர். உறவினர்களை பார்த்ததில் மகிழ்ச்சியாக உள்ளது.

சிறுவயதிலேயே படித்துக் கொண்டே வயலில் உழைக்கும் பழக்கம் கொண்டவன். அதனால் ஏற்பட்ட உடல் உறுதியால் தற்போது 5 நாட்கள் சைக்கிளில் பயணம் மேற்கொள்ள முடிந்தது. இன்னும் சிறிது காலம் உறவினர்களுடன் இருந்துவிட்டு பின்னர் சென்னைக்கு செல்ல முடிவெடுத்து இருக்கிறேன் என்றார்.

73 வயதில் 600 கி.மீ. தொலைவுகளை 5 நாட்கள் பயணம் மேற்கொண்டு கடந்து வந்த முதியவரை அப்பகுதியினர் பாராட்டினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.