June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

போதையில் நடிகையிடம் தப்பு பண்ண முயன்ற நடிகர் -ஓட்டம் பிடித்த நடிகை

1 min read
Actor-streaming actress who tried to make a misbehaving

தமிழ் சினிமாவில் கிராமத்து இயக்குனர் என பெயர் எடுத்தவரின் படத்தில் அறிமுகமானவர் தான் அந்த நாயகி. முதல் படமே தாறுமாறாக வெற்றி பெற்றதால் தொடர்ந்து தமிழ் சினிமாவின் அப்போதைய முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் ஜோடி போட்டார்.

தொடர் வெற்றிப் படங்களில் பூரித்துப் போன அந்த நாயகி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் புகழ் உச்சிக்கு செல்ல நேரடியாக வட இந்தியா பக்கம் சென்றவர் அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

சினிமாவில் நடித்து ஓய்ந்த பிறகு ஒரு தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார். அந்த நாயகி முதல் முதலில் வடமொழியில் அறிமுகமாகும்போது படப்பிடிப்புக்கு சென்று வர ஏதுவாக ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார்.

அதே ஓட்டலில் தான் அந்த ஹீரோவும் தங்கியிருக்கிறார். இன்னும் முதல் நாள் காட்சிகூட சூட்டிங்க்கு செல்லாத நிலையில் அந்த ஹீரோ செம போதையில் ஹீரோயின் அறைக்கதவை தட்டியுள்ளார். நாயகியும் எதார்த்தமாக கதவை திறக்க நாயகியை கட்டி இழுத்துக் கொண்டுபோய் கட்டிலில் தள்ளி விட்டாராம்.

இதனால் பதற்றமடைந்த நாயகி உடனடியாக ஹோட்டல் அறையை விட்டு ராத்திரியோட ராத்திரியா ஓடி விட்டாராம். அந்த நடிகர் வேறு யாருமில்லை. சமீபத்தில் சிறைவாசம் சென்று வந்தவர் தான்.

வடமொழியில் பிரபல நடிகராக வலம் வந்தாலும் தற்போது கன்னட மொழியில் ஒரு படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த கன்னட படத்திற்கு தற்போது இந்திய சினிமாவே பெரும் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில்தான் இந்த செய்தி வெளிவந்துள்ளது. இவ்வளவு மோசமான ஆளை எப்படி சினிமாவில் வளர்ந்து விட்டார்கள் என கோபத்தில் இருக்கிறார்களாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.