June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

ஓர் ஆண்டாக பூட்டி கிடந்த வீட்டிற்கு ரூ.11,000 மின் கட்டணம்

1 min read


Rs 11,000 electricity bill for a house that has been locked for a year

26-7-2020
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக்கும் மேலாக பூட்டிக் கிடந்த வீட்டிற்கு ரூ.11,000 மின்கட்டணம் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின்கட்டணம்

கொரோனா ஊரடங்கு காலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான மின்கட்டணத்தை ஊரடங்கு காலத்திற்குப் பிறகு கட்டலாம் என அரசு அறிவித்தது. இந்த நிலையில் ஜூன் மாதத்திலிருந்து மின் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மின்கட்டணம் கணக்கெடுப்பு முறையில் குளறுபடிகள் இருப்பதாகவும், அளவுக்கு அதிகமாக கட்டணங்கள் விதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக்கும் மேலாக பூட்டிக் கிடந்த வீட்டிற்கு ரூ.11,000 மின்கட்டணம் வந்துள்ளது. பொறையார் அடுத்துள்ள சங்கரன்பந்தலில் வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரின் வீடு கடந்த ஓராண்டாக பூட்டி கிடந்துள்ளது. ஆனால், அந்த வீட்டிக்கு தற்போது ரூ.11,000 மின் கட்டணம் செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி சம்பந்தப்பட்டவர் மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.
இதுதவிர பலர் தங்கள் வீட்டு மின்கட்டணம் அதிகமாகி உள்ளதாக கூறுகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.