June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 54,736 பேருக்கு கொரோனா; தமிழ்நாட்டில் 7,010 பேர் டிஸ்சார்ஜ்

1 min read

54,736 person affected for corona in India; Discharch 7.010 in Tamil Nadu

2-8-2020
இந்தியாவில் ஒரே நாளில் 54,736 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்வர்களில் நேற்று (சனிக்கிழமை) ஒரே நாளில் 7,010 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் ஆனுார்கள்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் எவ்வளவோ முயற்சி செய்தும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா பரவல் பற்றிய தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் காலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று காலையில் வெளியிட்ட தகவல்கள் விவரம் வருமாறு:-

இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ஒரே நாளில் புதிதாக 54,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் கொரோனாவுக்கு 853 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,50,724 ஆக உயர்ந்துள்ளது. இதில் 11,45,630 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 5,67,730 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 37,364 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கண்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா

கொரோனா பாதிப்பு பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:-
தமிழகத்தில் நேற்று (சனிக்கிழமை ) மட்டும் 5,879 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதில், 5,822 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 57 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,51,738 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 121 ஆய்வகங்கள் மூலமாக, இன்று மட்டும் 60,580 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 27 லட்சத்து 18 ஆயிரத்து 718 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

டிஸ்சார்ஜ்

நேற்று(சனிக்கிழமை) கொரோனா உறுதியானவர்களில், 3,544 பேர் ஆண்கள், 2,335 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,52,651 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 99,060 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 7,010 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 966 ஆக உள்ளது.

99 பேர் சாவு

இன்று மட்டும் கொரோனா பாதித்த 99 பேர் உயிரிழந்தனர். அதில், 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 77 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 4,034 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 56,738 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.