கவர்னர் மாளிகையில் மேலும் 87 பேருக்கு கொரோனா; கவர்னருக்கு மருத்துவ பரிசோதனை
1 min read
Corona for 87 more at the Raibhavan; Medical examination to the Governor
2-8-2020
கவர்னர் மாணிகையில் மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு , மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
கவர்னர்மாளிகை
சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மளிகையில் (ராஜ்பவன்) பணியாற்றும் ஊழியர்கள் 147 பேருக்கு கடந்த வாரம் கொரோனா அறிகுறி தென்பட்டது. இதனால் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 84 பேருக்கு, நோய் தொற்று இருப்பது உறுதியானது.
அவர்கள், கவர்னர் மாளிகையின் பிரதான வாயிலில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள். அவர்கள் அனைவரும், தனிமைப்படுத்தப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, 38 பேருக்கு, மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், கவர்னரின் உதவியாளர் உட்பட 3 பேருக்கு மட்டும், நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து டாக்டர்களின் ஆலோசனைப்படி, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
மேலும் 87 பேருக்கு…
இந்நிலையில், கவர்னர் மாளிகையில் பணியாற்றிய மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக பன்வாரிலால் புரோஹித் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு கொரோனா டெஸ்ட் உள்பட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.