தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் ; எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
1 min read
Higher fees for corona treatment in private hospitals; Edappadi Palanisamy Warning
2-8-2020
தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.
தனியார் ஆஸ்பத்திரிகள்
தமிழகத்தில் கொரோனாவுக்கு தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் கூறப்படுகிறது. சில ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் ‘பேக்கேஜ்’ என்ற பெயரில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் வந்தன. அந்த ஆஸ்பத்திரியில்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
நடவடிக்கை
கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும்.
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்