தமிழகத்தில் பஸ்போக்குவரத்து எப்போது தொடங்கும்?; எடப்பாடி பழனிசாமி பதில்
1 min read
When will the bus service start in Tamil Nadu ?; Edappadi Palanisamy Answer
7-8-2020
தமிழகத்தில் பஸ் போக்குவரத்து எப்போது என்பதற்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்தபிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
புதிய கல்வி கொள்கை
புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அளிக்கும் அறிக்கையின்படி முடிவு எடுக்கப்படும்.
EIA எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது.
பஸ் போக்குவரத்து
இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய தற்போதைக்கு வாய்ப்பில்லை; அது எளிமையாக்கப்பட்டது
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததும் பொது போக்குவரத்து தொடங்கப்படும்
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முதல் அமைச்சர் ஆவேன் என்று மு.க.ஸ்டாலின் சூழுரைத்துள்ளாரே என்று கேட்டதற்கு எடப்பாடி பழனிசாமி, கூறும்போது, தமிழகத்தில் எந்த கட்சியை அரியணையில் ஏற்றுவது என மக்களே முடிவு செய்வர் என்று பதில் கூறினார்.