இந்தியாவில் ஒரேநாளல் 62,064 பேருக்கு கொரோனா; 1,007 பேர் சாவு
1 min read
In India 62,064 person affected for corona and death 1,007 one day
இந்தியாவில் ஒரே நாளில் 62,064 பேருக்கு கொரோனா 1,007 பேர் சாவு
10-8-2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 62,064 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 1,007 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
62,064 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. கொரோன நிலவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் காலையில் வெளியிட்டு வருகிறது. இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் நேற்று(திங்கட் கிழமை)) ஒரே நாளில் 62,064 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால்,கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 22,15,075 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 1,007 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கையும் 44,386 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு நேற்று மட்டும் 54,589 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 15,35,744 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,34,744 பேர் தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தியாவில் நேற்று ஞாயிற்றுக் கிழமை) 4,77,023 மாதிரிகள், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. இதனால், மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 2,45,83,558 ஆக அதிகரித்தது.
மராட்டியம்
இந்தியாவில் மராட்டிய மாநிலம்தான் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை மொத்தம் 5,15,332 பேர் பாதிப்படைந்து உள்ளனர். இதுவரை 17,757 பேர் கொரோவுக்கு இறந்துள்ளனர்.
இதனை அடுத்து தமிழகத்தில் மொத்த பாதிப்பு 2,96,901 ஆகவும், இறப்பு 4,927 ஆகவும் உள்ளது. ஆந்திராவில் பாதிப்பு 2,27,850 ஆகவும் இறப்பு 2,036 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 1,78,087 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இறப்பு 3,198 ஆக உள்ளது. டெல்லியில் 1,45,427 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதுவரை 4,111 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் 1,22,609 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2,069 பேர் இதுவரை இறந்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் 95,554 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருகிறார்கள். இதுவரை 2,059பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.