தமிழ்நாட்டில் ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா- தென்காசியில் 114 பேர்
1 min read
In Tamil Nadu, 5,914 people in a single day, 114 in Corona-Tenkasi
10-8-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. அதே நேரம் இன்று மட்டுமு் 6,037 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் 114 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
5,914 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோன நிலவரம் பற்றிய தகவலை தினமும் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று ( திங்கட்கிழமை)
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) மட்டும் 5,914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 5,879 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 35 பேர் வெளிமாநிலம் மற்றுமூ வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 3,532 பேர் ஆண்கள், 2,382 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,82,779 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,20,007 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது.
சென்னையில்
தமிழகத்தில் இன்று கொரேனா கண்டறியப்பட்டவர்களில் சென்னையில் மட்டும்
976 பேர். (சென்னை இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 1,10,121 ஆக உயர்ந்து இருக்கிறது.)
சென்னையைத் தவிர, இன்று, செங்கல்பட்டில் 483 பேருக்கும், திருவள்ளூரில் 399 பேருக்கும், தேனியில் 357 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 310 பேருக்கும், கோவையில் 292 பேருக்கும், கடலூரில் 287 பேருக்கும், கன்னியாகுமரியில் 205 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
தென்காசி
தூத்துக்குடி மாவட்டத்தில் 196 பேருக்கும், தென்காசியில் 114 பேருக்கும், திருநெல்வேலியில் 83 பேருக்கும், விருதுநகரில் 189 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டதில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இன்று 100 பேருக்கு கொரோ உறுதி செய்யப்பட்டு இருகிறது.
தமிழ்நாட்டில் 130 ஆய்வகங்கள் மூலம் இன்று 67,153 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை மொத்தம் 32 லட்சத்து 92 ஆயிரத்து 958 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
டிஸ்சார்ஜ்
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 6,037 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதனால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 44 ஆயிரத்து 675 ஆக உள்ளது.
இன்று மட்டுமு் சென்னையில் 1,305 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். ( சென்னையில் இதுவரை 96,466 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.)
கோவையில் இன்று 388 பேரும், விருதுநகரில் 355 பேரும், செங்கல்பட்டில் 341 பேரும், திருவள்ளூரில் 337 பேரும், தேனியில் 321 பேரும், காஞ்சிபுரத்தில் 311 பேரும், மதுரையில் 298 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
114 பேர் சாவு
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 114 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர் . இவர்களில் 80 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 34 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்றவர்கள். இவர்களையும் சேர்த்து, தமிழகத்தில் கொரோனாக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 5,041 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு இன்று இறந்தவர்களில் சென்னையில் மட்டும் 25 பேர். கோவை, கன்னியாகுமரியில் தலா 7 பேரும், செங்கல்பட்டு, மதுரை, தென்காசி, தூத்துக்குடி, வேலூர், விருதுநகரில் தலா 5 பேரும், திண்டுக்கல், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருவள்ளூரில் தலா 4 பேரும், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருநெல்வேலியில் தலா 3 பேரும், திருச்சியில் 2 பேரும், கடலூர், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், திருவாரூரில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
தற்போது 53,099 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 12 வயது வரை உள்ள சிறுவர்- சிறுமிகள் என 14 ஆயிரத்து 883 பேர். 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 49 ஆயிரத்து 826 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 38 ஆயிரத்து 106 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட தகவல்களை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.