தென்காசி, நெல்லையில் தலா 136 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 136 people each in Tenkasi and Nellai
தென்காசி, தூத்துக்குடியில் தலா 136 பேருக்கு கொரோனா
11-8-2020
தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் தலா 136 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3382 ஆக அதிகரித்தது.
இன்று மட்டும் 62 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 2026 பேர் டிஸ்சார்ஜ் ஆகி இருக்கிறார்கள்.
தற்போது தென்காசி மாவட்டத்தில் 1302 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று ஒரே நாளில் கொரோனாவால் 4 பேர் பலியாகியுள்ளனர். இதனால் தென்காசியில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 136 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6801 ஆக அதிகரித்தது. இன்று ஒரே நாளில் 496 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இந்த மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 4896 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது இந்த மாவட்டத்தில் மொத்தம் 1815 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கரோனாவால் 8 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 110 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9469 ஆக அதிகரித்தது. இன்று 234 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை இந்த மாவட்டத்தில் மொத்தம் 7718 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1671 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
இந்த மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று இறப்பு இல்லை.
தப்பி ஓட்டம்
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டிலிருந்து 2பேர் தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி சிவத்தையா புரத்தையாபுரத்தைச் சேர்ந்தவர் உட்பட 2 பேர் கொரோனோ சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்கள் இருவரும் இன்று தப்பிச் சென்று விட்டனர்.
கொரோனா தொற்றால் இறந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணியில் போலீசார் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.