தமிழகத்தில் ஒரே நாளில் 5,834 பேருக்கு கொரோனா ; 6,005 பேர் டிஸ்சார்ஜ்
1 min read
In Tamil Nadu 5.834 person affected for corona and 6005 discharch
11-8-2020
தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 5,834 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 6,005 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
5,834 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றிய தகவல்களை மாநில சுகாதாரத்துறை தினமும் மாலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 5,834 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களில் 5,814 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 20 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் ரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,08,649 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,377 பேர் ஆண்கள், 2,457 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,86,156 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,22,464 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 986 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,11,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை தவிர, இன்று செங்கல்பட்டில் 388 பேருக்கும், திருவள்ளூரில் 362 பேருக்கும், ராணிப்பேட்டையில் 333 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 330 பேருக்கும், கோவையில் 324 பேருக்கும், தேனியில் 297 பேருக்கும், கடலூரில் 281 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் 131 ஆய்வகங்களில் இன்று மட்டும் 67,492 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இவற்றையும் சேர்த்து , இதுவரை 33 லட்சத்து 60 ஆயிரத்து 450 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
டிஸ்சார்ஜ்
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 6,005 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 680 ஆக உள்ளது.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,108 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 97,574 ஆக உயர்ந்துள்ளது.
திருநெல்வேலியில் 496 பேரும், விருதுநகரில் 374 பேரும், காஞ்சிபுரத்தில் 368 பேரும், தேனியில் 342 பேரும், கடலூரில் 323 பேரும், செங்கல்பட்டில் 291 பேரும், மதுரையில் 278 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
118 பேர் சாவு
கொரோனாவுக்கு இன்று மட்டும் 118 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 71 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 47 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்வர்கள்.
இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 5,159 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 52,810 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதில் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 15 ஆயிரத்து 113 பேர் இருக்கிறார்கள். 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 54 ஆயிரத்து 740 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 38 ஆயிரத்து 796 பேர்.
சென்னையில்…
கொரோனாவுக்கு இன்று இறந்தவர்களில் சென்னையில் மட்டும் 23 பேர் இறந்துள்ளனர். கன்னியாகுமரியில் 13 பேரும், கோவை, திருவள்ளூர், திருநெல்வேலியில் தலா 8 பேரும், தஞ்சாவூர், திருவண்ணாமலையில் 6 பேரும், செங்கல்பட்டு, மதுரை, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பூர், திருச்சியில் தலா 4 பேரும், திருவாரூரில் 3 பேரும், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், சேலம், சிவகங்கை, தேனி, வேலூரில் தலா 2 பேரும், கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, விழுப்புரத்தில் தலா ஒருவரும் இன்று கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.