11-ம் படிக்க விண்ணபித்துள்ள 53 வயது கல்வி மந்திரி
1 min read
The 53-year-old education minister has applied to study 11th
11-8-2020
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கல்வி மந்திரி தனது 53 வயதில் 11-ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ளார்.
ஜார்கண்ட்
ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி சிபுசோரன் தலைமையில் முக்தி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் கல்வி மந்திரியாக இருப்பவர் ஜகர்நாத் மாதோ. இவர் மனித வள மேம்பாட்டுத் துறையையும் கவனித்து வருகிறார். இவர் மந்திரி சபையில் 4-வது இடத்தில் உள்ளார்.
இவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இதனால் இவரை எதிர்கட்சிகள் விமரிசத்தன.
11-ம் வகுப்பு
இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட மந்திரி ஜகர்நாத் மாதோ தற்போது 11ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ளார். தற்போது 53 வயதாகும் இவர்11-ம் வகுப்பு படிக்கப் போவது குறித்து கூறியதாவது:-
நான் கல்வித்துறை மந்திரியாக பொறுப்பேற்றதில் இருந்து ஒரு சிலர் தனது கல்வித் தகுதி குறித்து ஆக்ரோஷத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுபோன்ற தொடர் விமர்சனங்கள் என்னை 11-ம் வகுப்பு படிக்க தூண்டியுள்ளது.
நான் கல்வித்துறையுடன் எனது கல்வியையும் சேர்த்து கவனிக்கப்போகிறேன்.
11ம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள எனது விண்ணப்பம், விதிகளின் கீழ் வந்தால், கல்வியை தொடர அனுமதி கிடைக்கும். அதன்பிறகு அரசியலிலும் படிப்பிலும் சமநிலையை ஏற்படுத்துவது பற்றி சிந்திப்பேன். உயர்கல்வி பயில ஆசை இருக்கிறது, ஆனால் எனது முதல் இலக்கு பள்ளிப்படிப்பை முடிப்பது தான். அதன்பின்னரே பட்டதாரி ஆகுவது குறித்து நினைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் சுமார் 30 எம்.எல்.ஏ.க்கள், 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான கல்வி தகுதியையே பெற்றுள்ளனர்.