கோவை அருகே மலைவாழ் மாணவர்களுக்கு பாடம் நடத்து ஆசிரியர்கள்
1 min read
Teachers conduct lessons for hill tribe students at Coimbatore dist.
12-8-2020
கோவை அருகே மலைவாழ் பகுதியில் வசிக்கும் மலைவாழ் பகுதி மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் சுழற்சி முறையில் சென்று பாடம் நடத்துகிறார்கள்.
ஆன்-லைன் வகுப்பு
கொரோனா ஊடரங்கால் பள்ளிக்கூடத்தை திறக்க முடியவில்லை. ஆனால் தனியார் பள்ளிகளில் ஆன்-லைன் மூலம் பாடங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பல தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடி ஆன்-லைன் மூலம் பாடம் படிக்கிறார்கள்.
தற்போது அரசு பள்ளி மாணவ -மாணவிகளும் பயன்பெறும் வகையில் டெலிவிஷன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. ஆனால் மலை வாழ் பகுதி மக்கள் பலரிடம் டெலிவிஷன் வசதி இடையாது. எனவே அவர்களால் டெலிவிஷன் மூலம் நடத்தப்படும் பாடத்தை கவனிக்க முடியாது.
பாடம் நடத்தும் ஆசிரியர்கள்
எனவே கோவை அருகே மலை வாழ்பகுதியில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் குறைந்த அளவில் சென்று பாடம் நடத்துகிறார்கள்.
கோவை மாவட்டம் ஆனைலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை வனப்பகுதிகளில் சர்க்கார்பதி, எருமைபாறை, கோழிகமுத்தி, வெள்ளிமுடி, கூமாட்டி உள்ளிட்ட 17 மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த பகுதி மாணவ- மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங் கப்பட்டு உள்ளன. ஆழியாறு அரசு உயர்நிலைப்பள்ளியில் மலைவாழ் மக்களின் குழந்தைகள் 18 பேருக்கு ஆசிரியர்கள் சென்று, பாடம் நடத்துகிறார்கள். ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கூடம் செல்கிறார்கள்.
ஆசிரிகளர், மாணவர்கள் முகக்கவசம் அணிந்தே செல்கிறார்கள். மாணவர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து தனித்தனியே அமர வைக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் சுப்பிரமணியம் கூறியதாவது:-
10 முதல் 12 மணி வரை
ஆழியாறு புளியங்கண்டி பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பில் பல வீடுகளுக்கு மின்சார வசதி இருந்தாலும், பலரது வீடுகளில் டி.வி., செல்போன் கிடையாது. இதனால் மலைவாழ் பகுதி மாணவ-மாணவிகள் ஆன்லைன் வகுப்பு, கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக அங்கு சென்று ஆய்வு நடத்தப்பட்டது.
இதையடுத்து அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்களை கொண்டு நேரில் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரை வகுப்பு நடத்தப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு பாடம் சொல்லி கொடுக்கப்படுகிறது. இதற்காக ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு சென்று பாடம் நடத்தி வருகின்றனர். சமூக இடைவெளியை பின்பற்றி மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.