June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தூத்துக்குடி முன்னாள் எஸ்பி உள்பட 9 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

1 min read

12.8.2020

Transfer of 9 IPS officers

தமிழகத்தில் 9 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சாத்தான்குளம் சம்பவத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த தூத்துக்குடி முன்னாள் எஸ்பி அருண்பாலகோபாலன் உள்ளிட்ட 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக உள்துறைச் செயலர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

  1. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் தூத்துக்குடி எஸ்.பி அருண்பாலகோபாலன் சென்னை சைபர் பிரிவு எஸ்பி-2 ஆக மாற்றப்பட்டுள்ளார்.
  2. சென்னை சைபர் பிரிவு எஸ்பி-2 ஆக பதவி வகித்த ஓம் பிரகாஷ் மீனா சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

3.சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜி சிபிசக்ரவத்தி சிபிசிஐடி சைபர் செல் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

4.சிபிசிஐடி சைபர் செல் எஸ்.பி ஜெயலட்சுமி தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

5.தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் எஸ்பியாக உள்ள ஜெயச்சந்திரன் தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

  1. தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு எஸ்பியாக இருந்த சி.ஷியாமலா தேவி சென்னை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு சிறப்பு பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
  2. சென்னை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு சிறப்பு பிரிவு எஸ்பியாக இருந்த கண்ணம்மாள் சென்னை, மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர்-2 ஆக மாற்றப்பட்டுள்ளார்.
  3. சென்னை, மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர்-2 ஆக இருந்த தீபா சத்யன் அம்பத்தூர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
  4. அம்பத்தூர் துணை ஆணையர் நிஷா சென்னை சைபர் பிரிவு எஸ்பி-2 ஆக மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு உள்துறைச் செயலர் ஏ.கே.பிரபாகரன் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.