June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

பிரணாப் முகர்ஜி பற்றி வலைதளங்களில் தவறாக வதந்தி

1 min read


Misinformation about Pranab Mukherjee on websites

13-8-2020
புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து வதந்தி பரவிய நிலையில், அவர் உயிருடன் உள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

பிரணாப் முகர்ஜி

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல்நலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஆஸ்பத்திரியில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. இருப்பினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

வதந்தி

இந்த நிலையில், பிரணாப் முகர்ஜி பற்றி தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. சிலர் அந்த வலைதளத்தில் அனுதாபங்களையும் தெரிவித்தனர்.
ஆனால், இதனை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
பிரணாப் மகன் அபிஜித் முகர்ஜி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “எனது தந்தை உயிருடன் உள்ளார். கற்பனை மற்றும் பொய் செய்திகள் சில பத்திரிகையாளர்கள் சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.
பிரணாப் முகர்ஜி பற்றிய வதந்தியை அவரது மகள் ஷர்மிஸ்தாவும் மறுத்துள்ளார்.
இதற்கிடையே ராணுவ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “பிரணாப்பின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். சுயநினைவின்றி, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.” என்று கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.