தமிழகத்தில் ஒரே நாளில் 5,890 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 5,890 people in a single day in Tamil Nadu
14-8-2020
தமிழகத்தில் ஒரே நாளில் 5,890 பேர் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
5,890 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று பற்றிய விவரங்களை தமிழக சுகாதார துறை தகவல் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 5,890 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களில் 5,862 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 28 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,26,245 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 134 ஆய்வகங்கள் மூலமாக இன்று மட்டும் 70,153 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை 35 லட்சத்து 69 ஆயிரத்து 453 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 3,518 பேர் ஆண்கள், 2,372 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,96,744 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,29,472 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 5,556 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 015 ஆக உள்ளது.
117 பேர் சாவு
கொரோனா பாதித்தவர்களின் இன்று மட்டும் 117 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 83 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 34 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,514 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 53,716 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 15 ஆயிரத்து 872 பேர். 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 69 ஆயிரத்து 313 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 41 ஆயிரத்து 060 பேர்.
சென்னையில்
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,187 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,14,260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர, இன்று திருவள்ளூரில் 495 பேருக்கும், செங்கல்பட்டில் 437 பேருக்கும், கோவையில் 385 பேருக்கும், தேனியில் 367 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 315 பேருக்கும், கடலூரில் 221 பேருக்கும், சேலத்தில் 191 பேருக்கும், ராணிப்பேட்டை, வேலூரில் தலா 178 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
தென்காசி
திருநெல்வேலி மாவட்டத்தில் 117 பேரும், தென்காசியில் 93 பேரும், தூத்துக்குடியில் 60 பேரும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
இன்று கொரோனாவுக்கு இறந்தவர்களில் சென்னையில் 25 பேரும், கோவை, தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலையில் தலா 8 பேரும், செங்கல்பட்டில் 6 பேரும், கன்னியாகுமரியில் 5 பேரும், கடலூர், தென்காசி, திருநெல்வேலி, வேலூரில் தலா 4 பேரும், திண்டுக்கல், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, திருப்பூரில் தலா 3 பேரும், காஞ்சிபுரம், கரூர், தஞ்சாவூர், திருப்பத்தூர், விருதுநகரில் தலா 2 பேரும், அரியலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் தலா ஒருவரும் என 117 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 837 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,00,643 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று திருவள்ளூரில் 372 பேரும், செங்கல்பட்டில் 351 பேரும், ராணிப்பேட்டையில் 343 பேரும், காஞ்சிபுரத்தில் 319 பேரும், கன்னியாகுமரியில் 269 பேரும், கோவையில் 243 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.