17-ந் தேதி முதல் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ்; ஏழைகளுக்கு வாகன வசதி செய்யப்படுமா?
1 min read
E-Pass for all applicants from 17th; Will vehicle facilities be provided for the poor?
14-8-2020
வருகிற 7-ந் தேதி முதல் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதே நேரம் இ-பாஸ் பெற்ற ஏழைகளுக்கா அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
முத-ல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இ-பாஸ்
தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் இ-பாஸ் நடைமுறை வருகிற ஆகஸ்டு 17-ந் தேதி முதல் அமலுக்கு வரும்.
அதன்படி ஆதார் அல்லது ரேசன் அட்டை, தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும்.
தவிர்க்க முடியாத பணிகள்
திருமணம், மரணம், அவசர மருத்துவ சிகிச்சை ஆகிய காரணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது.
தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் இ-பாஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
தொழில் துறையினர், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில் தளர்வுகள் வழங்கப்படுகின்றன. முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழகம் முழுவதும் பயணிக்க ஏதுவாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனே வழங்கப்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து, தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
அரசு பஸ் இயக்கப்படுமா?
வருகிற 17-ந் தேதி முதல் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்பது வரவேற்க தக்கது. இதன் மூலம் இ-பாஸ் வழங்கியதில் நடந்த முறைகேடு தடுக்கப்படும்.
அதே நேரம் இ-பாஸ் பெற்றவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல தனியார் கார், வேனை எதிர்பார்க்க வேண்டும். அவர்கள் கட்டணமாக மிக அதிக தொகையை வசூலிக்கிறார்கள். இதனால் இறப்பப உள்பட மிகமிக அவசியமான காரியத்துக்குகூட ஏழைகளால் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை.
எனவே தமிழக அரசு ஒரு குறிப்பிட்ட ஊர்களுக்கு இ-பாஸ் அதிகமானோர் பெற்றிருந்தால் அவர்களுக்கு மட்டும் அரசு பஸ்சை இயக்க வேண்டும். இதற்காக பயணிகளிடம் தகுதியான கட்டணத்தை மட்டுமே வாங்க வேண்டும்.