போபாலில் 25 அடி உயர பாரதமாதா வெங்கல சிலை
1 min read
25 feet tall bronze statue of Bharatmata in Bhopal
15-8-2020
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 25 அடி உயர பாரத மாதா வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த சிலை இன்று ( சனிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.
பாரதமாதா சிலை
மத்திய பிரதேச மாநில தலைநகரான போபாலில் பாரத மாதாவுக்கு 25 அடி உயரத்தில் வெண்கலத்தால் ஆன சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
போபாலில் உள்ள போர்வீரர்கள் நினைவிடமான சவுர்யாவில் தாமரை மலர் மீது கையில் தேசிய கொடியுடன் நிற்பது போன்று பாரதமாதா சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையின் பீடத்தில் அசோக சக்கரம், தேசிய கீதம், தேசிய முழக்கம் போன்றவை இடம் பெற்றுள்ளன.
திறப்பு
இன்று ( சனிக்கிழமை) நாட்டின் 74-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு அந்த சிலை திறக்கப்பட்டது. மாநில முதல்-மந்திரியும் பாரதீய ஜனதாவின் மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் அந்த சிலையை திறந்து வைத்தார். அவர் பேசும்போது, தனது நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக கூறினார்.
சிலை திறப்பு நிகழ்ச்சியின் போது மாநில மந்திரிகள், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், உயர் அதிகாரிகள், சுதந்திர போராட்ட தியாகிகள் பிரமுகர்கள் உள்பட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் மலர் தூவி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.