தமிழகத்தில் ஒரே நாளில் 5,890 பேருக்கு கொரோனா ; டிஸ்சார்ஜ் 5,667
1 min read
Corona for 5,890 people in a single day in Tamil Nadu ; Discharge 5,667
17-8-2020
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) ஒரே நாளில் 5,890 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இன்று 5,667 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
5,890 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றிய தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தினமும் மாலையில் அறிவித்து வருகிறது. அதன்படி இன்று அறிவித்த தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று ( திங்கட்கிழமை) மட்டும் 5,890 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 5,870 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 20 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,43,945 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 136 ஆய்வகங்களில் இன்று மட்டும் 67,532 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 37 லட்சத்து 78 ஆயிரத்து 778 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
டிஸ்சார்ஜ்
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 3,670 பேர் ஆண்கள். 2,220 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,07,508 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,36,408 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 5,667 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 83ஆயிரத்து 937 ஆக உள்ளது.
120 பேர் சாவு
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று ( திங்கட்கிழமை) மட்டும் கொரோனா பாதித்த 120 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 84 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 36 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,886 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 54,122 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் .
12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 16 ஆயிரத்து 609 பேர். 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 83 ஆயிரத்து 629 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 43 ஆயிரத்து 707 பேர்.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,185 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,17,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை தவிர இன்று கோவையில் 393 பேருக்கும், கடலூரில் 390 பேருக்கும், திருவள்ளூரில் 308 பேருக்கும், தேனியில் 279 பேருக்கும், சேலத்தில் 268 பேருக்கும், செங்கல்பட்டில் 224 பேருக்கும், விருதுநகரில் 212 பேருக்கும், கன்னியாகுமரியில் 209 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 174 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
தென்காசி
தென்காசியில் 147 பேருக்கும், நெல்லையில் 100 பேருக்கும், தூத்துக்குடியில் 75 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
இன்று சென்னையில் 24 பேரும், கோவையில் 10 பேரும், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருச்சியில் தலா 7 பேரும், திருநெல்வேலியில் 6 பேரும், கன்னியாகுமரி, வேலூரில் தலா 5 பேரும், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலையில் தலா 4 பேரும், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசியில் தலா 3 பேரும், கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூரில் தலா 2 பேரும், கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, நீலகிரி, பெரம்பலூர், திருவாரூர், திருப்பூர், விருதுநகரில் தலா ஒருவரும் என 120 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 660 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,03,358 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று திருவள்ளூரில் 477 பேரும், செங்கல்பட்டில் 465 பேரும், திருவண்ணாமலையில் 460 பேரும், ராணிப்பேட்டையில் 305 பேரும், தேனியில் 295 பேரும், கோவையில் 277 பேரும், கடலூரில் 272 பேரும், காஞ்சிபுரத்தில் 205 பேரும், கன்னியாகுமரியில் 194 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.