July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

மலேசியாவில் இந்தியாவைவிட 10 மடங்கு வீரியம் உள்ள கொரோனா

1 min read
Corona is 10 times more potent in Malaysia than in India

17-8-2020
மலேசியாவில் இந்தியாவை விட 10 மடங்கு வீரியம் உள்ள கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவில் பல வகை

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் பரவி மக்களை பெரும் பீதிக்கு உள்ளாக்கி வருகிறது. இது தனது பரிணாமத்தை அடிக்கடி மாற்றி வருவதால் அதற்கு மருந்தோ, தடுப்பூசியோ உடனடியாக கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் தெற்கு ஆசிய நாடுகளில் வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது.

கொரோனா வைரசில் பல பிரிவுகள் உள்ளன. தீவிரமான பிரிவு உயிரைப் பறிக்கும் அளவுக்கு வீரியம் உடையது. அதேசமயத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாத மிதமான பிரிவும் உண்டு.

10 மடங்கு

தற்போது மலேசியாவில் இந்தியாவில் இருப்பதைக் காட்டிலும் 10 மடங்கு வீரியம் உள்ள கொரோனா பிரிவு தாக்கியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். டி614-ஜி என்ற இந்த நியூட்ரிசன் மலேசியாவில் 45 பேரை தாக்கியுள்ளது. இந்தியாவில் இருந்து விமானம் மூலமாக மலேசியா திரும்பிய உணவக முதலாளி ஒருவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். ஆனால் அவர்மூலமாக அவரது உற்றார் உறவினர் நண்பர்கள் ஆகியோருக்கு பரவி தற்போது இந்த பிரிவு 45 பேரை தாக்கியுள்ளது.

ஊரடங்கை சரியாக பின்பற்ற இந்த குணமாக முதலாளி 5 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நோர் ஹிஷாம் அப்துல்லா பொது மருத்துவமனை இயக்குனர் இதுகுறித்து கூறுகையில், “இதுவரை கொரோனாவுக்குக் கண்டுபிடித்த தடுப்பு மருந்து இந்தவகை கொரோனாவைப் போக்க பயனற்றது” என தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.