இந்தியாவால் கொரோனா பரிசோதனை 10 மடங்கு அதிகரித்தாலும், பாதிப்பு கூடவில்லை
1 min read
Although the corona test by India has increased 10 times, the impact has not increased
18-8-2020
“இந்தியாவில் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை 10 மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் கொரோனா பாதிப்பு என்று அதிகரிக்காமல் 8 சதவீதமாகவே இருக்கிறது.” என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
கொரோனா பரிசோதனை
இந்தியாவில் கொரோனா மாதிரி பரிசோதனைகள் எண்ணிக்கை 3 கோடியை தாண்டிவிட்டது. கொரோனா மாதிரி பரிசோதனைகள் அதிகரித்து வரும் நிலையில், புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதே நேரம் முந்தைய நாட்களோடு ஒப்பிடுகையில் 1 சதவீதம் அளவுக்குதான் பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் மற்றும் இறப்பு விகிதம் சரிந்து வருகிறது.
கடந்த மாதம் ( ஜூலை) 14-ந் தேதி 1 கோடியே 20 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தன. தற்போது ஆகஸ்டு 16-ந் தேதி 3 கோடி மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இருந்தபோதும், கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 7.5 சதவீதத்தில் இருந்து 8.8 சதவீதமாக மட்டுமே அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு விகிதத்தை 5 சதவீதமாக குறைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி, மராட்டியம், கோவா, சத்தீஸ்கர், இமாச்சல் பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில், தேசிய சராசரியை விட பாதிப்பு விகிதம் சற்று அதிகமாக இருப்பதால், உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் ஒரு நாளைக்கு மாதிரி பரிசோதனை ஒரு லட்சத்திற்கும் குறைவாக இருந்த நிலையில், தற்போது நாளொன்றுக்கு கொரோனா பரிசோதனை 8 லட்சம் என்ற எண்ணிக்கையாக அதிகரித்துள்ளது. ஒருநாளைக்கு 10 லட்சம் மாதிரிகள் பரிசோதனை என்ற இலக்கை அடைய மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். அப்போது தொற்று பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் இருக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதார அமைக்கம் கூறியுள்ளது.