அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட தமிழகத்தில் ஒரே நாளில் 5,709 பேருக்கு கெரோனா
1 min read
Corona to 5,709 people in a single day in Tamil Nadu, including Minister Vijayabaskar
18-8-2020
தமிழகத்தில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது மனைவி, மகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இன்று ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரேனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதேநேரம் இன்று ஒரே நாளில் 5,850 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் போக்குவரத்து
5,709 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றிய தகவலை தினமும் மாலையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று ( செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களில் 5,698 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 11 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,49,654 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 136 ஆய்வகங்கள் மூலம், இன்று மட்டும் 67,025 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை 38 லட்சத்து 45 ஆயிரத்து 803 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
5,850 பேர் டிஸ்சார்ஜ்
இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில், 3,445 பேர் ஆண்கள், 2,264 பேர் பெண்கள். கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,10,953 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,38,672 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது.
இன்று ஒரே நாளில் மட்டும் 5,850 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 89ஆயிரத்து 787 ஆக உள்ளது.
121 பேர் சாவு
கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 121 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 89 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 32 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,886 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 53,860 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில்12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 16 ஆயிரத்து 834 பேர். 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 88 ஆயிரத்து 350 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 44 ஆயிரத்து 470 பேர்.
சென்னையில்…
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,182 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 1,19,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சென்னயில் 1,097 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையைத் தவிர இன்று திருவள்ளூரில் 489 பேருக்கும், செங்கல்பட்டில் 400 பேருக்கும், கோவையில் 392 பேருக்கும், கடலூரில் 250 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 249 பேருக்கும், சேலத்தில் 286 பேருக்கும், தேனியில் 295 பேருக்கும், கொரோனா உறுதியாகியுள்ளது.
தென்காசி
திருநெல்வேலி மாவட்டத்தில் 119 பேருக்கும், தென்காசியில் 93 பேருக்கும், தூத்துக்குடியில் 68 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
இன்று சென்னையில் 24 பேரும், சேலம், சிவகங்கையில் தலா 8 பேரும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி தலா 7 பேரும், வேலூர் 6 பேரும், கோவை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூரில் தலா 5 பேரும், கடலூரில் 4 பேரும், கள்ளக்குறிச்சி, மதுரையில் தலா 3 பேரும், திருநெல்வேலி, தென்காசி, ராணிப்பேட்டை, ராமநாதபுரம், நாமக்கல், நாகப்பட்டினம், ஈரோடு, அரியலூரில் தலா இருவரும், திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், சிவகங்கை, தேனி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், விருதுநகரில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,097 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,04,455 ஆக உயர்ந்துள்ளது. இன்று செங்கல்பட்டில் 400 பேரும், கோவையில் 253 பேரும், கடலூரில் 242 பேரும், காஞ்சிபுரத்தில் 263 பேரும், மதுரையில் 147 பேரும், ராணிப்பேட்டையில் 285 பேரும், தேனியில் 446 பேரும், திருவள்ளூரில் 384 பேரும், திருவண்ணாமலையில் 215 பேரும், தூத்துக்குடியில் 217 பேரும், வீடு திரும்பியுள்ளனர்.
விஜய பாஸ்கருக்கு கொரோனா
தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சரின் மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
கொரோனா உறுதியானதை அடுத்து சென்னையில் தனியார் ஆஸ்பஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.