மத்திய பிரதேசத்தில் இனி அந்த மாநிலத்தவர்களுக்கே வேலை
1 min read
In Madhya Pradesh, the work is no longer for the people of that state
18-8-2020
மத்திய பிரசேதத்தில் இனிமேல் சொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (செவ்வாய்க்கிழமைகூறியதாவது:-
மத்திய பிரதேச அரசு இன்று முக்கிய முடிவு எடுத்துள்ளது. மாநிலத்தில் உள்ள அரசுப்பணிகள் அனைத்தும் இனிமேல் சொந்த இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதற்கு ஏற்ற வகையில் சட்டம் கொண்டு வரப்படும். இது தொடர்பாக மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சுதந்திர தினத்தன்று வெளியிட்ட அறிவிப்புகள் தொடர்பாக முதல்வர் சவுகான், இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அதன்படி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.