தமிழகத்தில் ஒரே நாளில் 5,795 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 5,795 people in a single day in Tamil Nadu
19-8-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,795 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.ஒரே நாளில் 6,384 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
5,795 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரத்தை தினமும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வௌியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(புதன்கிழமை) ஒரே நாளில் 5,795 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது . இவர்களில் 5,785 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 10 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,55,449 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 136 ஆய்வகங்கள் மூலம் இன்று மட்டும் 67,720 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 39 லட்சத்து 13 ஆயிரத்து 523 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று 65,592 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து, மொத்த நபர்களின் எண்ணிக்கை 37,78,249 ஆக அதிகரித்துள்ளது.
டிஸ்சார்ஜ்
இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,541 பேர் ஆண்கள், 2,254 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,14,494 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,40 ,926 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 6,384 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 171 ஆக உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று( புதன்கிழமை) மட்டும் 116 பேர் இறந்தனர். இவர்களில் 84 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 32 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,123 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 53,155 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.
இதில் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 17 ஆயிரத்து 26 பேர். 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 93 ஆயிரத்து 193 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 45 ஆயிரத்து 230 பேர்.
சென்னை
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,186 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,20,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையி் 1,039 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையை தவிர, இன்று திருவள்ளூரில் 393 பேருக்கும், செங்கல்பட்டில் 315 பேருக்கும், கோவையில் 394 பேருக்கும், கடலூரில் 238 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 257 பேருக்கும், சேலத்தில் 295 பேருக்கும், தேனியில் 288 பேருக்கும், கொரோனா உறுதியாகியுள்ளது.
நெல்லை
திருநெல்வேலி மாவட்டத்தில் 151பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 62 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 99 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இன்று கொரோனாவுக்கு இறந்தவர்களில் சென்னை, கோவையில் தலா 16 பேர். ராணிப்பேட்டையில் 10 பேரும், திருவள்ளூரில் 9 பேரும், திண்டுக்கல்லில் 6 பேரும், கடலூரில் 5 பேரும், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, தென்காசி, தேனியில் தலா 4 பேரும், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், காஞ்சிபுரம் தலா 3 பேரும், மதுரை, நாகப்பட்டினம், தஞ்சாவூர்,திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் தலா 2 பேர், விழுப்புரம், திருப்பூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, அரியலூரில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
சென்னயைில் இன்று ஒரே நாளில் 1,039 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, இன்று செங்கல்பட்டில் 448 பேரும், கோவையில் 286 பேரும், கடலூரில் 155 பேரும், காஞ்சிபுரத்தில் 440 பேரும், மதுரையில் 89 பேரும், ராணிப்பேட்டையில் 131 பேரும், சேலம் 238, தேனியில் 373 பேரும், திருவள்ளூரில் 402 பேரும், திருவண்ணாமலையில் 343 பேரும், தூத்துக்குடியில் 185 பேரும், வீடு திரும்பியுள்ளனர்.