காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை
1 min read
Terrorist shot dead in Kashmir
19-8-2020
காஷ்மீரில் பயங்கரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதனால் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் சண்டை நடந்து வருகிறது.
பயங்கரவாதிகள்
ஜம்மு -காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பயங்கர வாதிகள் ஊடுருவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அதேநேரம் காஷ்மீருக்குள் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை கண்டு பிடிக்க தேடுதல் வேட்டைதொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள சித்ரஹாம் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று மாலை பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.
சுட்டுக்கொலை
பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும், சில பயங்கரவாதிகள் அங்கு பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனால் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நீடித்து வருகிறது.