June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை

1 min read
Treatment with Ecmo instrument for SP Balasubramaniam

20-8-2020
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. இதனால் அவர் சிறப்பு வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது.
அவரது உடல் நிலை குறித்து அவரது மகன் வீடியோவில் தகவலை சொல்லி வருகிறார். நேற்று உடல்நிலையில் சற்று முன்னேற்றம் இருப்பதாக கூறப்பட்டது.

எக்மோ கருவி

இந்த நிலையில் தற்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை குழுவினருடன் இந்திய மற்றும் உலக தரம் வாய்ந்த மருத்துவர்கள் இணைந்து அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நலம் பெற திரை உலகினர், ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் இன்று கூட்டு பிரார்த்தனை செய்தார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.