கொரோனா பற்றி தமிழிசை சவுந்தரராஜன் பேசியதால் சர்ச்சை
1 min read
Controversy over Tamil music Saundarajan's talk about Corona
21-8-2020
கொரோனா பற்றிய தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதால் பெரும் சர்ச்சை கிளம்பியது.
தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை சவுந்தரராஜன் தமிழக பாரதீய ஜனதா தலைவராக மாற்றுக் கட்சிகளுக்கு அவ்வப்போது அதிரடியாக பதில் கூறுவார். அவர் தெலுங்கானா கவர்னராக இருந்தபோது அரசியல் பேசுவதை அறவே நிறுத்தி விட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவரது கொரோனா பற்றிய பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குற்ற்சாட்டு
தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பரவல் வேகமாக இருப்பதகாவும் ஆனால் சோதனைகள் ஆமை வேகத்தில் நடப்பதாகவும் குற்ற்ச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளன.
இந்த நிலையில்தான் தமிழிசை சவுந்தரராஜன், ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்) அரசு மெத்தனமாக செயல்படுகிறது.
இதுகுறித்து அரசுக்கு 5, 6 முறை கடிதம் எழுதியும் எந்தப் பலனும் இல்லை. கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பது என்பது தெலுங்கானா அரசுக்கு சுமையாக மாறி விட்டதோ என தோன்றுகிறது. முதல்-மந்திரி சந்திரசேகர ராவிடம் இதுகுறித்து பேசும்போது சற்று காட்டமாகவே கூறியுள்ளேன்,” என்று கூறினார்.
தெலுங்கானா கவர்னரான இருந் தமிழிசை சவுந்தரராஜன் இப்படி பேசியது தெலுங்கானா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது.
தமிழிசையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஹூசுர்நகர் தொகுதி எம்.எல்.ஏ. சைதி ரெட்டி, டுவிட்டர் பக்கத்தில் ஒருகருத்தை பதிவிட்டார் . அதில் “நாட்டின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, கிராமங்களில் கூட அதிகளவில் சோதனைகள் மேற்கொள்ளப்படுவது தெலுங்கானா மாநிலத்தில் தான். முதல்வர் சந்திரசேகர ராவ் மேற்கொண்டுவரும் பல்வேறு திட்டங்களை மற்ற மாநிலங்களை காப்பி அடிக்கின்றன. மற்ற மாநிலங்களுக்கு நமது முதல்வர் ரோல்மாடலாக திகழ்கிறார். கவர்னர் தமிழிசையின் கருத்தை பார்க்கும்போது, அவர் தெலுங்கானா மாநில கவர்னரா, பாரதிய ஜனதா கட்சி தலைவரா என்ற சந்தேகம் எழுகிறது.” என்று பதிவிட்டிருந்தார்.
நீக்கம்
இந்த டுவிட்டர் பதிவு, தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித்தலைமையின் உத்தரவுப்படி, சைதி ரெட்டி, அந்த டுவிட்டர் பதிவை நீக்கிவிட்டார். இந்த உத்தரவுக்கு அம்மாநில பாரதீய ஜனதா கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.