June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

சந்திராயன்-2 விண்கலம் இதுவரை 4,400 முறை நிலவை சுற்றியுள்ளது

1 min read
The Chandrayaan-2 spacecraft has orbited the moon 4,400 times so far

21-8-2020

சந்திராயன்-2 விண்கலம் இதுவரை சூரியனை 4,400 முறை நிலவை சுற்றி வலம் வந்துள்ளது.

சந்திராயன்

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி சந்திராயன் 2 என்ற விண்கலத்தினை ஜி.எஸ்.எல்.வி. 3 ராக்கெட் மூலம் ஏவியது.

இந்த ராக்கெட்டில் நிலவின் துருவப்பகுதியை ஆராய்வதற்காக விக்ரம் லேண்டரையும் நிலவை சுற்றிவந்து ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டரையும் வைத்திருந்தனர். முதலில் ஆர்பிட்டர் ராக்கெட்டில் இருந்து பிரிந்து நிலவை சரியான கோணத்தில் சுற்றி வருகிறது. ஆனால் விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரையில் மோதி சேதம் அடைந்துவிட்டது.

4.400 முறை சுற்றியது

சந்திராயன்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு ஒரு வருடம் ஆகும் நிலையில் இதுவரை மொத்தம் 4,400 முறை நிலவை வெற்றிகரமாக சுற்றி வந்துள்ளது. ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவின் சுற்று வட்டப்பாதையில் நிலவிலிருந்து 100 அல்லது 125 கி.மீ., தொலைவில் சுற்றி வருகிறது. மேலும், 7 வருடங்கள் நிலவைச் சுற்றி வருவதற்கு தேவையான எரிபொருள் அதில் இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

விண்கலத்தில் உள்ள எட்டுக்கும் அதிகமான உபகரணங்கள் இன்று வரை நன்கு செயல்பட்டு வருகின்றன. அதில் உள்ள சக்தி வாய்ந்த கேமிரா மூலம் இதுவரை 22 படங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்கள் நிலவின் 1,056 சதுர கிலோ மீட்டர் பரப்பை தெளிவாக காண்பிக்கக் கூடியவை. மற்றொரு கேமிரா நிலவில் 40 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை படம் எடுத்துள்ளது.

இப்படங்கள் மூலம் நிலவின் மேற்பரப்பு மற்றும் பள்ளங்கள் தெளிவாக ஆய்வு செய்யப்படும். இப்படங்கள் மூலம் அடுத்த முறை விண்கலம் ஏவப்படும் போது லேண்டர் பாதுகாப்பாக இறங்க ஏதுவான இடங்கள் கண்டறிப உதவும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.