இந்தியர்களின் பிளாஸ்மா அதிக நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டது
1 min read
Plasma of Indians is highly immune
22-8-2020
கொரோனாவில் இருந்து மீண்ட இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு ரத்தத்தின் பிளாஸ்மா அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருக்கிறது என்று இங்கிலாந்து சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பிளாஸ்மா
கொரோனாவுக்கு மருந்தோ தடுப்பூசியோ இன்னும் கண்டுபிடிக்காமல் இருந்த நிலையில் கொரோனாவுக்கு சிறந்த மருந்தாக பிளாஸ்மா பயப்படுகிறது. கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் ரத்தத்தில் இருந்து எடுக்ககும் பிளாஸ்மாதான் கொரோனா நோயை விரட்ட நல்ல மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. காரணம் அந்த பிளாஸ்மாவில் கொரோனாவை முறியடிக்கும் சக்தி இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.
அந்த வகையில் இந்தியர்கள் மற்றும் தெற்கு ஆசிரியர்களின் பிளாஸ்மாவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.
இந்திய பாரம்பரியம்…
இது குறித்து இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை துறை வெளியிட்ட செய்தியில், “கொரோனாவால் குணமடைந்து இங்கிலாந்தில் இருக்கும் தெற்காசிய மற்றும் இந்திய பாரம்பரியம் கொண்டவர்கள், கொரோனாவால் உயிருக்கு போராடும் மற்றவர்களுக்கு ரத்த பிளாஸ்மாவை தானம் செய்ய முன் வர வேண்டும்.” என்று கூறியுள்ளது.
இங்கிலாந்தின் ரத்தம் மற்றும் உறுப்பு மாற்றுக்கான துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இருமடங்கு…
வெள்ளை இனத்தவர்களை காட்டிலும் இந்தியா மற்றும் தெற்காசிய பின்னணி கொண்டவர்களுக்கு இரு மடங்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. தெற்காசியர்களுக்கு கொரோனா ஏற்பட்டால் மோசமாக பாதிக்கப்படுவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது. அதே சமயம் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதால், அதிக நோய் எதிர்ப்பு சக்தியையும் பெறுகிறார்கள்.
பிளாஸ்மா தானம் வழங்கிய ஆசிய பின்னணி கொண்டவர்களில் 44.1 சதவீதம் பேர் போதுமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டிருந்தனர். இதுவே வெள்ளை இன மக்களில் 22 சதவீதம் பேர் மட்டுமே போதுமான எதிர்ப்பு சக்தி பெற்றிருந்தனர். பிளாஸ்மா தானம் 45 நிமிடங்களில் முடிந்து விடக் கூடிய பாதுகாப்பான, எளிமையான முறை. ரத்த சிவப்பணுக்கள் உங்களுடனே இருப்பதால் தானமளிக்கப்பட்ட பிளாஸ்மா மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உடல் விரைவாக உருவாக்கிவிடும்.
தெற்காசியர்கள் அதிகமுள்ள பகுதிகளான லண்டன், பிர்மிங்ஹாம், லிசெஸ்டர், மான்செஸ்டர் ஆகிய பகுதிகளில் பிளாஸ்மா கொடையாளர்கள் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பிளாஸ்மா தானமளிக்க அதிகளவில் முன் வர வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.