இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 லட்சத்தை தாண்டியது
1 min read
Corona impact in India exceeds 30 lakhs
23-8-2020
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 லட்சத்தை தாண்டியது.
30 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் அதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 30 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே நேரத்தில், கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம்(வெள்ளிக்கிழமை ) கொரோனா பரிசோதனையில் புதிய சாதனை படைக்கப்பட்டது. அன்றைய தினம் மட்டும் ஒரே நாளில் 10 லட்சம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இது, இந்த மாத தொடக்கத்தில் நடந்த பரிசோதனைகளின் எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகம் ஆகும்.
இந்த மாத தொடக்கத்தில், 3 லட்சம் முதல் 5 லட்சம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தினசரி 7 லட்சம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) 10 லட்சம் கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) மட்டும் 8,01,147 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 3,52,92,220 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந் தேதியில் மட்டும் நாடு முழுவதும் சுமார்10 லட்சம் மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) தெரிவித்தது. இந்தியாவில் ஒரு நாளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச பரிசோதனை இதுவாகும். அதேபோல், நேற்றும் (சனிக்கிழமை) 8,01,147 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
எனவே, ஆக.,21 மற்றும் 22 ஆகிய இரு நாட்களில் மட்டும் 18 லட்சம் மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.
தெலுங்கானா
இதற்கிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்த மாநிலங்களின் வரிசையில் தெலுங்கானா 7 வது இடத்தை பிடித்துள்ளது. நேற்றைய (சனிக்கிழமை) நிலவரப்படி 2,474 புதிய தொற்று பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது.