June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

போலீசை கொன்ற ரவுடிக்கு ஆதரவாக கண்ணீர் அஞ்சலி; நெல்லை ஆயுதப்படை போலீஸ்காரர் சஸ்பெண்டு

1 min read
Tearful tribute in support of Rowdy who killed police; Nellai Armed Policeman Suspended

23-8-2020

போலீசை கொன்ற ரவுடிக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் கண்ணீர் அஞ்சலி செலுத்திய நெல்லை ஆயுதப்படை போலீஸ்காரரை சஸ்பெண்டு செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

கண்ணீர் அஞ்சலி

பாளையங்கோட்டை ஆயுதப் படையில் பணியாற்றும் காவலர் சுடலைமுத்து. இவர் தனது ஃபேஸ்புக் ஐடியில் தூத்துக்குடி அருகே காவலர் சுப்பிரமணியனை வெடிகுண்டு வீசி கொலை செய்த ரவுடி துரைமுத்துவுக்கு ஆதரவாக அவரின் இறுதி ஊர்வலத்தை பதிவு செய்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

குற்றவாளியை பிடிக்க சென்ற காவலரை கொன்ற குற்றவாளிக்கு தனது சமூகத்தின் மீதுள்ள பற்றால் அவருக்கு ஆதரவாக சக காவலரே கண்ணீர் அஞ்சலி பதிவு செய்து போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

சஸ்பெண்டு

இதனைத்தொடர்ந்து காவலர் சுப்பிரமணியனை கொலை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக போலீஸ்காரர் சுடலைமுத்து செயல்பட்டதாக கூறி அவரை சஸ்பெண்டு செய்து மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.டாமோர் உத்தரவிட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.