தமிழகத்தில் ஒரே நாளில் 5,967 பேருக்கு கொரோனா ; 6,129 பேர் டிஸ்சார்ஜ்
1 min read
Corona for 5,967 people in Tamil Nadu one day ; 6,129 discharged
24-8-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,967 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 6,129 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.25 லட்சத்தை கடந்தது.
5,967 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றிய தகவல்களை தினமும் மாலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று ( திங்கட்கிழமை) மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) மட்டும்5,967 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவர்களில் 5,941 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 26 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,85,352 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 140 ஆய்வகங்கள் மூலம் இன்று மட்டும் 70,023 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து இதுவரை 42 லட்சத்து 76 ஆயிரத்து 640 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 3,611 பேர் ஆண்கள், 2,356 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,32,679 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,52,644 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது.
கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 6,129 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 456 ஆக உள்ளது.
97 பேர் சாவு
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 97 பேர் இறந்துள்ளனர். இவர்களில், 67 போ் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 30 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 6,614 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 53,282 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 18 ஆயிரத்து 197 பேர். 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 3 லட்சத்து 17 ஆயிரத்து 812 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 49 ஆயிரத்து 343 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில்…
சென்னையில் இன்று (திங்கட்கிழமை) 1,278 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து சென்னையில் மட்டும் இதுவரை 1,26,677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர இன்று கோவையில் 387 பேருக்கும், கடலூரில் 370 பேருக்கும், திருவள்ளூரில் 320 பேருக்கும், செங்கல்பட்டில் 306 பேருக்கும், சேலத்தில் 273 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 226 பேருக்கும், தேனியில் 193 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
தென்காசி
திருநெல்வேலி மாவட்டத்தில் 77 பேருக்கும், தென்காசியில் 94 பேருக்கும், தூத்துக்குடியில் 98 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
சென்னையில் கொரோனாவுக்கு 23 பேரும், காஞ்சிபுரத்தில் 8 பேரும், கோவையில் 7 பேரும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலியில் தலா 5 பேரும், கடலூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, விருதுநகரில் தலா 4 பேரும், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டையில் தலா 3 பேரும், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, திருப்பத்தூர், திருவள்ளூர், விழுப்புரத்தில் தலா 2 பேரும், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சிவகங்கை, வேலூரில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
இன்று மட்டும் சென்னையில் 1,234 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,10,819 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூரில் 800 பேரும், கோவையில் 338 பேரும், காஞ்சிபுரத்தில் 311 பேரும், தேனியில் 295 பேரும், தென்காசியில் 243 பேரும், செங்கல்பட்டில் 238 பேரும், திண்டுக்கல்லில் 222 பேரும், கடலூரில் 218 பேரும், கன்னியாகுமரியில் 206 பேரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.