June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தலைவர் பொறுப்பில் இருந்து விலக விரும்புகிறேன்; சோனியா

1 min read


The leader would like to resign; Sonia

24-8-2020

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து விலக விரும்புவதாக சோனியா காந்தி கூறியுள்ளார்.

ராகுல்காந்தி

காங்கிரஸ்கட்சியின் தலைவராக ராகுல்காந்தி இருந்துவந்தார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்கட்சி படுதோல்வி அடைந்ததால் அவர் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். கட்சி நிர்வாகிகள் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் அவர் தனது முடிவில் இருந்துபின்வாங்கவில்லை.

இதனால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா பொறுப்பு ஏற்றார். அவர் பொறுப்பேற்று ஓராண்டாகி விட்ட நிலையிலும், நிலையான தலைவர் இன்னும் நியமிக்கப்படவில்லை.

கடிதம்

இந்த நிலையில் கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடித்ததில் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்ந்து எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
இந்த கடிதம் கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம் இன்று ( திங்கட்கிழமை) டெல்லியில் கூடியது. இந்தக் கூடத்தில் 23தலைவர்கள் எழுதிய கடிதத்திற்கு சோனியா எழுதிய பதில் கடிதத்தை கேசி வேணுகோபால் வாசித்தார். அந்த கடிதத்தில், தலைவர் பதவியில் இருந்து விலக தயாராக இருப்பதாக சோனியா குறிப்பிட்டு உள்ளார். தலைவர் பொறுப்பில் இருந்து நிர்வாகிகள் என்னை விடுவித்துவிடுங்கள் என்றும் புதிய தலைவரை நிர்வாகிகள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மன்மோகன்சிங்

இந்த கடிதத்திற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ராணுவ மந்திரி ஏகே அந்தோணி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. தலைவர் பதவியில் சோனியா தொடர வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில் கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு தொண்டர்கள் சோனியா குடும்பத்தை சேர்ந்த ஒருவரே தலைவராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கோஷம் போட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.