14 வயது சிறுமியை மிரட்டி கூட்டு பலாத்காரம் -3பேர் கைது, 3 பேர் ஓட்டம்
1 min read
25.8.2020
14-year-old girl gang-raped, 3 arrested, 3 run awayகேரள மாநிலம் கொச்சி அருகே மஞ்சும்மல் பகுதியில் வெளிமாநில தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு 14 வயதில் மகள் உள்ளார். அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டுக்கு அருகே உத்தர பிரதேசத்தை சேர்ந்த 6 வெளிமாநில தொழிலாளர்களும் வசித்து வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம், யாரும் இல்லாத நேரத்தில் அந்த தொழிலாளர்களில் 2 பேர் வீட்டிற்குள் நுழைந்து சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பின்னர் அவர்கள் அந்த சிறுமியை மேலும் மிரட்டி கொச்சியில் பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அந்த தொழிலாளர்கள் 6 பேரும் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
இந்த விபரம் சிறுமியின் வீட்டினருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள், கொச்சி ஏலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து உத்தர பிரதேசம் ராம்பூர் பகுதியை சேர்ந்த ஹனிபா(28), பர்காத்கான் (29), ஷாகித் (24) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களுடன் சேர்ந்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த மற்ற 3 பேர் உத்தர பிரதேசத்துக்கு தப்பி சென்றுள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 14 வயது சிறுமி 6 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.