கொரோனா தடுப்பூசி- இந்தியாவின் உதவியை நாடும் ரஷ்யா
1 min read
Corona vaccine – Russia seeks India’s help
26-8-2020
கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவின் உதவியை ரஷ்யா நாடுகிறது.
கொரோனா தடுப்பூசி
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டு பிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக அக்கறை காட்டி வருகின்றன. ஆனாலும் இன்னும் அந்த கண்டுபிடிப்பு முழுமை அடையாமல் உள்ளது. பல நாடுகள் மருந்து கண்டுபிடித்தாலும் அதை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பல நாடுகள் இரண்டாம் கட்ட பரிசோதனையை முடித்துவிட்டதாக அறிவித்து உள்ளன.
அதேபோல் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் அறிவியல் ஆராச்சி நிறுவனமும் இணைந்து தடுப்பூசியை கண்டறிந்துள்ளதாகவும், இதற்கு ஸ்புட்னிக்-v எனவும் பெயரிட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் கடந்த 11-ந் தேதி அறிவித்தார். இதில் இரண்டு கட்ட பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. 3-வது கட்ட பரிசோதனை இன்னும் நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் உதவி
ரஷ்யாவின் இந்த தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் தடுப்பூசி தயாரிப்பு குறித்து ரஷ்யா இந்தியாவின் உதவியை நாடி இருப்பதாக கூறப்படுகிறது.
ஸ்புட்னிக் -v தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கும், 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையை இந்தியாவில் நடத்தவும் இந்தியாவின் ஒத்துழைப்பை ரஷ்ய கேட்டுள்ளது. இதற்காக தடுப்பூசி குறித்த சில தகவல்களை ரஷ்யா இந்தியாவிடம் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷணிடம் இதுபற்றி கேட்டபோது, ” ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை பொறுத்தமட்டில், இந்தியாவும் ரஷியாவும் தகவல் பரிமாற்றம் செய்து வருகின்றன. கூடுதல் தகவல்கள் தர வேண்டியுள்ளது” என்றார்.