June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று கொரோவில் இருந்து 5,891 பேர் குணம் அடைந்தனர்

1 min read

In Tamil Nadu today, 5,891 people recovered from Corona

2-9-2020
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 5,891 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவில் விவரங்களை தினமும் மாலையில் தமிகழ சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) ஒரே நாளில் 5,990 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதில், 5,962 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 28பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,39,959 ஆக உயர்ந்துள்ளது.

டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் 154 ஆய்வகங்களில் இன்று மட்டும் 75,829 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இவைகளையும் சேர்த்து, இதுவரை 49 லட்சத்து 64 ஆயிரத்து 141 மாதிரிகள் பரி சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 3,465 பேர் ஆண்கள், 2,525 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த 2,65,688 பேர்.பெண்களின் எண்ணிக்கை 1,74,242. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 .
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 5,891 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணம் ஆனவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்து 063 ஆக உள்ளது.

98 பேர் சாவு

தமிழகத்தில் இன்று(புதன்கிழமை) மட்டும் கொரோனாவுக்கு 98 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 57 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 41 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 7,516 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 52,380 பேர் கொரோனாவுக்கா பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில்12 வயது வரை உள்ள சிறுவர்- சிறுமிகள் 20 ஆயிரத்து 131 பேர். 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 3 லட்சத்து 62 ஆயிரத்து 522 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 57 ஆயிரத்து 306 பேர்.

சென்னையில்…

சென்னையில் மட்டும் இன்று 1,025 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து சென்னையில் மட்டும் இதுவரை 1,37,732 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை தவிர கோவையில் 579 பேருக்கும், கடலூரில் 405 பேருக்கும், சேலத்தில் 403 பேருக்கும், செங்கல்பட்டில் 390 பேருக்கும், திருவள்ளூரில் 285 பேருக்கும், விழுப்புரத்தில் 224 பேருக்கும், திருவண்ணாமலையில் 213 பேருக்கும், வேலூரில் 159 பேருக்கும், தஞ்சாவூரில் 147 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனாவுக்கு இன்று இறந்தவர்களில் சென்னையில் 19 பேரும், கன்னியாகுமரியில் 9 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும், கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் தலா 5 பேரும், சேலத்தில் 4 பேரும், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவாரூர், திருநெல்வேலி, திருப்பூர், விழுப்புரத்தில் தலா 3 பேரும், கடலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், தேனி, திருப்பத்தூர், திருச்சி, வேலூரில் தலா 2 பேரும், ஈரோடு, நீலகிரி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகரில் தலா ஒருவரும் அடங்குவர்.

இன்று சென்னையில் மட்டும் கொரோனாவில் இருந்து 1,587 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். சென்னையில் இதுவரை மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,22,407 ஆக அதிகரித்துள்ளது.
கடலூரில் 404 பேரும், செங்கல்பட்டில் 396 பேரும், திருவள்ளூரில் 315 பேரும், தென்காசியில் 276 பேரும், காஞ்சிபுரத்தில் 230 பேரும், கோவையில் 217 பேரும், சேலத்தில் 215 பேரும், மதுரையில் 201 பேரும், தேனியில் 173 பேரும் இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

மாவட்ட வாரியாக…

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை வருமாறு:-

அரியலூர் – 43
செங்கல்பட்டு – 390
சென்னை – 1025
கோவை – 579
கடலூர் – 405
தர்மபுரி – 54
திண்டுக்கல் – 136
ஈரோடு – 106
கள்ளக்குறிச்சி – 54
காஞ்சிபுரம் – 133
கன்னியாகுமரி – 111
கரூர் – 64
கிருஷ்ணகிரி – 49
மதுரை – 123
நாகை – 71
நாமக்கல் – 83
நீலகிரி – 14
பெரம்பலூர் – 10
புதுக்கோட்டை – 76
ராமநாதபுரம் – 57
ராணிப்பேட்டை – 98
சேலம் – 403
சிவகங்கை – 25
தென்காசி – 82
தஞ்சாவூர் – 147
தேனி – 95
திருப்பத்தூர் – 94
திருவள்ளூர் – 285
திருவண்ணாமலை – 213
திருவாரூர் – 133
தூத்துக்குடி – 57
திருநெல்வேலி – 110
திருப்பூர் – 87
திருச்சி – 120
வேலூர் – 159
விழுப்புரம் – 224
விருதுநகர் – 62
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு – 2
உள்நாடு – 11
ரெயில் நிலைய கண்காணிப்பு – 0

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.