7-ந் தேதி முதல் ஓடும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய கட்டுப்பாடுகள்
1 min read
Restrictions on travel on the Metro train running from the 7th
2-9-2020
மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மெட்ரோ ரெயில்
இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரெயில் சேவை வருகிற 7-ந் தேதி முதல் இயங்கும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு அறவிவித்துள்ளது.
அதில் விவரம் வருமாறு:-
வெப்ப பரிசோதனை
- கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கட்டுபாட்டு பகுதிகளில் உள்ள நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டிருக்கும்
- உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின், கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
- சமூக விலகலை கடைபிடிக்க சில ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நிற்காது
- பயணத்தின் போது குறைந்தளவு பொருட்களை மட்டும் கொண்டு செல்லவேண்டும். மெட்டாலிக் பொருட்களை கொண்டு செல்ல அனுமதியில்லை.
முகக் கவசம்
- சமூக விலகலை கடைபிடிக்க, ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில் பெட்டிகளிலும் குறியீடு வரையப்பட்டிருக்கும்
- பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் முக கவசம் (மாஸ்க்) அணிவது கட்டாயம். முககவசம் இல்லாமல் வரும் பயணிகளுக்கு, கட்டணம் பெற்று கொண்டு முக கவசம் வழங்கப்படும்
- ஆரோக்கிய சேது செயலி பயன்படுத்துவது ஊக்கப்படுத்தப்படும்.
- மெட்ரோ ரெயில் நிலையங்களின் நுழைவு வாயில்களில் சானிடைசர்கள் வைக்கப்பட்டிருக்கும்
- குறிப்பிட்ட கால இடைவெளியில், ரெயில், சாதனங்கள், லிப்ட், தானியங்கி படிக்கட்டு, கழிப்பறை உள்ளிட்டவை சுத்தப்படுத்தப்படும்.
- ஸ்மார்ட் கார்டு மற்றும் ரொக்கமல்லா மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும். டோக்கன்கள், பேப்பர் ஸ்லீப்கள், தூய்மையாக பயன்படுத்தப்படும்.
*மெட்ரோ ரெயிலில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் ரயில் நிலையங்களில், பயணிகளுக்கு போதுமான நேரம் வழங்கப்படும்.
இவ்வாறு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.