June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரேநாளில் 5,859 பேர் கொரோனாவல் இருந்து மீண்டனர்

1 min read

In Tamil Nadu, 5,859 people recovered from Corona one day

5-9-2020

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் கொரோனாவில் இருந்து 5,859 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆனாா்கள்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றிய விவரங்களை தமிழக சுகாதாரத்துறை தினமும் மாலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று ( சனிக்கிழமை) வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) ஒரேநாளில் 5,870 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதில், 5,861 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 9 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,57,697 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 160 ஆய்வகங்களில் 81,793 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை 52 லட்சத்து 12 ஆயிரத்து 534 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,516 பேர் ஆண்கள். 2,354 பேர் பெண்கள். கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,76,255 . பெண்களின் எண்ணிக்கை 1,81,413. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29.

டிஸ்சார்ஜ்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 5,859 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 98 ஆயிரத்து 366 ஆக உயர்ந்துள்ளது.

61 பேர் சாவு

கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 61 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 40 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 21 பேர் தனியார் ஆஸ்பஸ்த்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு 7,748 இறந்துள்ளனர். தற்போது 51,583 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில்

சென்னையில் மட்டும் இன்று 965 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் இதுவரை மொத்தம் 1,40,685 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர கோவையில் 545 பேருக்கும், கடலூரில் 434 பேருக்கும், செங்கல்பட்டில் 293 பேருக்கும், சேலத்தில் 250 பேருக்கும், திருவள்ளூரில் 244 பேருக்கும், திருவண்ணாமலையில் 239 பேருக்கும், திருப்பூரில் 196 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

நெல்லை

திருநெல்வேலி மாவட்டத்தில் 127 பேருக்கும், தென்காசியில் 60 பேருக்கும் தூத்துக்குடியில் 127 பேருக்கும் இன்று கொரோனா கண்டறிப்பட்டது.
இன்று சென்னையில் 19 பேரும், சேலத்தில் 6 பேரும், கன்னியாகுமரியில் 5 பேரும், செங்கல்பட்டு, கடலூரில் தலா 4 பேரும், புதுக்கோட்டை, திருநெல்வேலியில் தலா 3 பேரும், ராணிப்பேட்டை, திருவாரூர், திருப்பூரில் தலா 2 பேரும், கோவை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நீலகிரி, ராமநாதபுரம், தஞ்சாவூர், தேனி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருச்சியில் தலா ஒருவரும் கொரோனாவால் இறந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,537 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். இவர்களையும் சேர்த்து மொத்தம் 1,26,428 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்கள். கோவையில் 366 பேரும், செங்கல்பட்டில் 357 பேரும், கடலூரில் 314 பேரும், சேலத்தில் 276 பேரும், காஞ்சிபுரத்தில் 240 பேரும், திருவண்ணாமலையில் 225 பேரும், திருவாரூரில் 187 பேரும், ராணிப்பேட்டையில் 186 பேரும் இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.