கொரோனா பெண்ணை கற்பழித்த ஆம்புலன்ஸ் டிரைவர் கைது
1 min read
Ambulance driver arrested for raping Corona leady
6-9-2020
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் கற்பழித்த ஆம்புலன்ஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கொரோனா பெண்
கேரள மாநிலம் பாலக்காடு அருகே காயம்குளத்தைச் சேர்ந்தவர் நவ்பல் (வயது 29). பத்தனம்திட்டாவில் ‘108’ ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
கொரோனா தொற்று உறுதி செய்த 42 வயது மற்றும் அவரது 19 வயது மகளை இவர் நேற்று ( சனிக்கிழமை) அதிகாலை , அவர்களின் வீட்டில் இருந்து ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அழைத்து சென்றார்.
ஆறன்முளை அரசு ஆஸ்பத்திரியில் அந்த 42 வயது பெண் அனுமதிக்கப்பட்டார். அவரது மகளை அடூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல்சிகிச்சைக்கு டாக்டர்கள் அனுப்பினர். அந்த பெண் அதே ஆம்புலன்சில் அடூர் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
கற்பழிப்பு
செல்லும் வழியில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாகனத்தை நிறுத்திய ஆம்புலன்ஸ் டிரைவர் நவ்பல், அந்த பெண்ணை கற்பழித்தார்.
ஆதன்பின் அந்தப் பெண்ணை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
இந்த சம்பவம் குறித்த, பாதிக்கப்பட்ட பெண் அடூர் ஆஸ்பத்திரி அதிகாரிகளிடம் கூறினார்.அவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் சொல்லவே போலீசார் வழக்கு பதிவு செய்து ஆம்புலன்ஸ் டிரைவர் நவ்பலை கைது செய்தனர். அவர் உடனடியாக, பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
தடியடி
இந்த சம்பவம் தொடர்பாக, கேரள மகளிர் நல ஆணையம் நேரடியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
கொரோனா நோயாளியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. சுகாதாரத் துறை அலுவலகம் முன்பு பாரதீய ஜனதா இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.