June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 5,783 பேருக்கு கொரோனா; 5,820 பேர் டிஸ்சார்ஜ்

1 min read

Corona for 5,783 people in Tamil Nadu today; 5,820 discharged

6-9-2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,783 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. அதேநேரம் 5,820 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

5,783 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றிய விவரங்களை தினமும் மாலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 5,783 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 5,773 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.10 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் . இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,63,480 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 161 ஆய்வகங்களில் 85,974 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை 52 லட்சத்து 98 ஆயிரத்து 508 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

டிஸ்சார்ஜ்

இன்று கொரோனா உறுதியானவர்களில் 3,449 பேர் ஆண்கள். 2,334 பேர் பெண்கள். கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,79,704 ஆக உள்ளது. பெண்களின் எண்ணிக்கை 1,83,747. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 .
கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 5,820 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 04 ஆயிரத்து 186 ஆக உள்ளது.

88 பேர் சாவு

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 88 பேர் இறந்துள்ளனர். சென்னையில் இன்று 17 பேரும், திருவள்ளூரில் 8 பேரும், சேலத்தில் 6 பேரும், கோவை, கடலூரில் தலா 5 பேரும், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூரில் தலா 4 பேரும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூரில் தலா 3 பேரும், கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருநெல்வேலி, விழுப்புரத்தில் தலா 2 பேரும், அரியலூர், தர்மபரி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவாரூர், விருதுநகரில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

இவர்களில் 58 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 30 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 7,836 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 51,458 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில்..

சென்னையில் இன்று மட்டும் 955 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர கோவையில் 538 பேருக்கும், கடலூரில் 388 பேருக்கும், செங்கல்பட்டில் 361 பேருக்கும், திருவண்ணாமலையில் 272 பேருக்கும், திருவள்ளூரில் 246 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 196 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 184 பேருக்கும், வேலூரில் 158 பேருக்கும், திருப்பூரில் 153 பேருக்கும், தஞ்சாவூரில் 150 பேருக்கும் இன்று கொரோனா உறுதியாகியுள்ளது.

நெல்லை

திருநெல்வேலி மாவட்டத்தில் 132 பேருக்கும் தென்காசியில் 53 பேருக்கும், தூத்துக்குடியில் 50 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

சென்னையில் இன்று மட்டும்1,100 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். சேலத்தில் 519 பேரும், கோவையில் 473 பேரும், கடலூரில் 397 பேரும், செங்கல்பட்டில் 367 பேரும், காஞ்சிபுரத்தில் 198 பேரும், திருநெல்வேலியில் 197 பேரும், ஈரோடில் 191 பேரும், தஞ்சாவூரில் 175 பேரும், வேலூரில் 150 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.