ஆந்திராவில் கோவில் தேர் தீப்பிடித்து எரிந்தது
1 min read
In Andhra Pradesh the temple chariot caught fire
6-9-2020
ஆந்திராவில் கோவில் தேர் ஒன்ற தீப்பிடித்து எரிந்தது.
கோவில் தேர்
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதியில்லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தேர், கோவில் வளாகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. தேர் பாதுகாப்புக்காக கூடாரம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணி அளவில் திடீரென அந்த தேர் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி அறிந்த அந்தப் பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
எனினும் தேர் முழுவதும் எரிந்து விட்டது. கோவிலுக்கு சொந்தமான தேர் எரிந்ததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். தேருக்கு சமூகவிரோதிகள் யாராவது தீ வைத்தார்களா என்றும் விசாரணை நடைபெறுகிறது.