June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

அடுத்த ஆண்டுவரை கொரோனா தடுப்பூசி வர வர வாய்ப்பு இல்லை; உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

1 min read

The corona vaccine is unlikely to come until next year; World Health Organization announcement

6-9-2020

“கொரோனா தடுப்பூசியை அடுத்த ஆண்டு பிற்பகுதி வரை வர வாய்ப்பு இல்லை என்று” என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி

சீனாவில் உருவான கொரோனா உலகம் முழுவதும் பரவி எண்ணற்றோரை கொன்று வருகிறது. இதற்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நேரம் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனாஉள்பட பல்வேறு நாடுகள் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டு பிடிக்கு
ம் பணியில் இறங்கி உள்ளன. பல நாடுகள் தடுப்பூசிகள் கண்டு பிடித்து அதை பரிசோதிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. அவர்கள் கண்டு பிடித்த மருந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் இருந்தால்தான் அந்த மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் கொடுக்கும். அதனால்தான் கண்டு பிடிக்கப்பட்ட மருந்துகள் அனைத்தும் தற்போது பரிசோதனை நிலையில் உள்ளன.

இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் தடுப்பூசி எப்போது வரும் என்பது குறித்து கூறியதவாது :-

அடுத்த ஆண்டு

கணிசமான எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையில் இருப்பதை வரவேற்கிறோம். இது பொதுவாக கோடிக்கணக்கான மக்களை உள்ளடக்கியது.
ஆனால் எதார்த்தமான காலக்கெடுவைப் பொறுத்தவரை, அடுத்த ஆண்டு பிற்பகுதி வரை பரவலான தடுப்பூசி போடுவதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதற்குள் தடுப்பூசியை மக்கள் எதிர்பார்க்க வேண்டாம்.

கொரோனா தொற்றுக்கு வேகமாக பரவி வரும் சூழலில், பாதுகாப்பான மற்றும் பயனுள்ளதாக நிரூபிக்கப்படாத ஒரு தடுப்பூசியை, நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

அதே நேரம் கொரோனா தொற்றால் மோசமான பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அமெரிக்காவில், நவம்பர் மாதம் 3-ந் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்பாக, “கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும்” என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளதார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.